Wednesday, 16 December 2015

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு  PAPER – I & PAPER II   90+ தேர்ச்சி பெற்ற அனைத்து 
ஆசிரியர்களின் கவனத்திற்கு

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம்  வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம்  வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது .
வேலையின்றி தவித்த , கண்ணீர் வடித்த நாட்களை எண்ணி தீர்வு கிடைக்க செயல்படுவோம்….
டிசம்பர் இறுதியில் வேலை கிடைக்க போகிறது என்று வரும் பொய் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாம் . TRB வெப்சைட்டிலோ, ஜெயா தொலைகட்சியிலோ செய்தி வந்தால் மட்டுமே உண்மை என்பதை சக ஆசிரியர்களுக்கு புரிய வையுங்கள், எடுத்து சொல்லுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்,,
எனவே கலந்துகொள்ள வரும்  அனைவரும் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் TET  சான்றிதழ் நகல்களை அவசியம் எடுத்து வரவும்
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.. .
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…
உண்ணாவிரத கூட்டம் பற்றிய தகவல்களை அறிய மட்டுமே கீழ் கண்ட அலைபேசி எங்களை வெளியிட்டுள்ளோம் .மேலும் விவரங்கள் தேவை என்றால் டிசம்பர்  20 அன்று நேரில் வந்து கேட்டுக்கொள்ளவும்…. .

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி              : 94426 91704
திருமதி.லாவண்யா        : 94865 94540
திருமதி. பானு            : 98940 35724
திரு.சக்தி                    : 97512 68580
திரு.ராஜபாண்டி            : 99433 73380
திரு. தினேஷ்            : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்



2013  தமிழ் நாடு தகுதி தேர்வு  PAPER I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து 
ஆசிரியர்களின் கவனத்திற்கு

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம்  வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம்  வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது .
இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்து கொள்கிறோம் .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை  அணுக   போகிறோம் .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும் இதுதான் மரபு.
மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும் அறிவோம்
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன்  வந்து கலந்து கொள்ளுமாறு  வேண்டுகிறோம் .
நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம்  என்பதை  நம் வருகையின் மூலமே அரசுக்கு உணர்த்த முடியும் .
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும் தவறாமல் பயன் படுத்திக்கொள்வோம்
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…

இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்..
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி                       :  94426 91704
திருமதி. லாவண்யா           : 94865 94540
திருமதி. பானு                  : 98940 35724
திரு.சக்தி                               :  97512 68580
திரு.ராஜபாண்டி                    :   99433 73380
திரு. தினேஷ்                    : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்


2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு  PAPER – I & PAPER II  90+ தேர்ச்சி பெற்ற அனைத்து
ஆசிரியர்களின் கவனத்திற்கு 

                          நமது  ஒரு நாள் வாழ்க்கை

இந்த உலகத்திற்கே விடியல் வருவதுபோல்தான் நமக்கும் விடிகிறது . விடியலுடன் பயமும் நம் மனதை அப்பி கொள்கிறது  இருட்டாய். ஏன்?... பார்க்கும் ஒவ்வொரு பழகிய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்தாக வேண்டுமே… கடமைக்கு சிரித்தாக வேண்டுமே…  இப்படி நாம் எதிர் கொள்ளும் கேள்விகளெல்லாம் ஈட்டியாய் பாயும். அவமானம் பீறிடும் 
" அப்புறம் இப்போ என்ன பண்றீங்க?
 “  எங்க வேலை  பாக்கறீங்க?  “
இந்த இரண்டு கேள்விகளும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் கொடுத்தவன் போல் பின் தொடர்கிறது .
காலை 8 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும் பெண்களை கண்டால் மனம் தாழ்வு  மனப்பான்மை கொள்கிறது…. பொறாமையோகோபமோ அல்ல. நம் அங்கீகாரம்  மறுக்கப்பட்டதை எண்ணி அரற்றுகிறது உள்ளம்….
ஒருபுறம் சத்தமிட்டு அழ முடியாத சூழல்!!   
அழகூடாது என்ற வைராக்கியம்  மறுபுறம் !!
இப்படி இதயமும்ரத்த ஓட்டமும் மாறிமாறி செயல்பட்டு உடல் நலமும் கேட்டு போனது...
2 மணி நேரம் இவைகளை மறக்க போராட வேண்டும்.  மீண்டும் மாலை மணி காலையில் அனுபவித்த அதே வேதனை. கொஞ்சம் இருண்ட பின்பு வெளி  உலக அன்றாட பணிகளை முடிக்க வேண்டும். இப்படி ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை,  இரண்டு வருடங்கள் ஆண்,  பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக அனுபவித்துள்ளோம் . நம்மில் யாரும் இதில் விதிவிலக்கல்ல .சில சகோதரசகோதரிகள் பேசும்போது கூறும் வேதனைகள்எதிர்கால பயங்கள் நம்மை உலுக்கிவிடும் .
ஒரு அரசாங்க பணி கிடைக்காமல் போனால் ஒரு தனிமனித  வாழ்வு இவ்வளவு பாதிக்க படுமா ?  என்ற  கேள்விக்கு விடை நாமே.

சமுதாயத்தில் கல்வி எவ்வளவு மென்மையாக்கும் என்பதற்கு இந்த TET  தேர்வே உதாரணம் .அதேபோல் விசித்திரமான ஒன்றும்  நம்பியாக வேண்டும். இதே TET  தேர்வால்  சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம் .இது தலைகீழ் விமர்சனம் அல்ல. உண்மை . அதற்கு உதாரணம் நாமே…

நாம் செய்த தவறு என்னஎப்போது யாரால் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்போம் .
எதிர்மறையான வினாக்கள் அல்ல இவையெல்லாம் ஐயம் இல்லாத வினாக்கள் .
வேலை கிடைக்குமா?
தலைமுறை சிறக்குமா?
சிறந்த ஆசிரியர்களாக வலம் வருவோமா ?
இப்படி இன்னும் ....
                                                                                                                                   தொடரும் .
                                                                                                                         மு .ஜெயகவிதாபாரதி